Friday, August 14, 2009

ஒரு கிராமத்தானின் கடிதம் - நண்பனுக்கு




மக்கா.... சோமா இருக்குதியளா? பயக்க எல்லாம் சோமா இருக்கானுவளா? ஊரில வேற என்னடே விசேசம்? பேப்பர்லையும், டிவிலையும் பாத்துருப்ப, டெய்லி பண்ணி காச்சல்ல பத்து பேரு செத்து போரானுவளாம். சோக்கேடுனால செத்து போரவனுவள விட இவனுவ கிளப்புற பீதியில பேதி வந்து செத்துருவானுவ போல இருக்கு. இங்க எவன பாத்தாலும் மூக்குல கைய வச்சிக்கிட்டே நடக்கியானுவ. முந்தா நாள் வரைக்கும் மூக்குக்க கிட்ட வந்து துப்பி துப்பி பேசினவனுவ இப்ப கிட்டையே வரல.

"யான வந்தா ஆள கொல்லும், மைரையா பிடுங்கும்னு" இருந்த நமக்கே கொஞ்சம் பேடியாதான் இருக்கு.ஜலதோசத்துல எள்ளு போல மூக்கு ஒழுவுனா கூட பண்ணி காச்சல் வந்துட்டோன்னு பயர வேண்டியது இருக்கு.சரி மக்கா எனக்கு தெரிஞ்ச ரெண்டு, மூணு விசையத்த எழுதியன், நீயும் நம்ம பயலுவ கிட்ட சொல்லு... சரியா??

பண்ணி காச்சல் ஏதோ ஒரு வைரசுனால வருதாம். இந்த சோக்கேடு மொதல்ல பாரின்ல தான் வந்துது, பிறவு பாரின்ல இருந்து நம்ம நாட்டுக்கு வந்த பயலுவளால நம்ம எடத்துல பரவீட்டு இருக்கு. இது காத்துல தும்முனாலோ, துப்புனாலோ பறவுறனால தான் பெரிய மண்ட வேதன.

இங்கேரு... எவனுக்காவது காச்சலோ, பீச்சலோ, மூக்கு ஒளுக்கோ ரெண்டு நாளைக்க மேல இருந்தா ஆசுபத்திரிக்கு போவ சொல்லு. பீடிய குடிச்சிட்டு எங்கேயாவது முக்குல கமந்து கிடக்க போரானுவ. பிறவு ஒஸீல எவனாவது ஓல்ட் மங்க் தந்தான்னு குடிச்சிட்டு கிடக்காதிங்க, இந்த நேரத்துல நல்லதில்ல சொல்லிட்டேன்.

பின்ன ஆசுபத்திரியில பெரிசா கியூ நிக்குன்னு சொல்லியானுவ. இந்த கவன்மன்று காரனுவள நெனச்சா எரிச்சலா இருக்கு. இங்க மனுசன் பேடிச்சு பெய் கிடக்கான், இவனுவ என்னாண்ணா ரெத்தம் எடுக்கியது, டெஸ்ட் பண்ணியதுன்னு நேரத்த ஓட்டிட்டு , சோக்கேடு இருக்கானு நாலு நாளைக்கு சொல்ல மாட்டேங்கிறானுவளாம். என்ன மக்கா செய்யது சும்மாளா சொன்னானுவ "உயிர் பொழைக்கணுமுண்ணா ஒண்ணுக்கு அடிச்சு தான் ஆகணுமுன்னு".

மக்கா சுத்தமா இருந்தா இந்த சோக்கேடே கிட்ட வராதுன்னு சொன்னானுவ. குளத்துல வெள்ளம் கிடக்கனால டெய்லி மூணு நேரம் குளிங்க. பைனியோ, பப்பாளியோ கிடச்சா அடிச்சு சப்புங்க... நேத்து ரேடியோவுல சொன்னானுவ துளசி தின்னாலும் கொள்ளாமுண்ணு.

பிறவு வேற யாதாவது வெவரம் வேணுமுண்ணா கீழ உள்ள நம்பருக்கு போன போடுங்க.
044-24321569, 25305000, 25305723, 011-23061469, 1075 .

இப்படிக்கு
ஒங்க கூட்டுக்காரன்