Saturday, February 28, 2009

பயணங்கள்

பயணங்கள் எப்போதும் சுவாரசியம் ஆனவை.
ஒவ்வொரு பயணமும் எப்போதும் ஏதோ ஒரு கதையை, வரலாற்றை சொல்லி கொண்டே நீள்கிறது தீராத வானத்தை போல. வாழ்க்கையின் முடியாத பக்கங்களில் புதர் மண்டி கிடக்கும் சில புதிர்களான - சொல்ல முடியா ரகசியங்களையும், கவலைகளையும், சில பயணங்கள் எப்போதுமே ஞாபகப்படுத்தி விடுகிறது நாம் கேட்காமலே..............
நீண்ட நீள் பரப்பான நீர் தேக்கத்தில் ஒற்றையாய் நிற்கும் பட்டுப் போன மரத்தில் அமர்ந்து இருக்கும் ஊர் குருவி எப்போதும் அழகு தான். நீண்ட வயல் பரப்பில் தலை கவிழ்த்து மண்புழு தேடும் வாத்தும், கூரிய பார்வையுடன் காத்திருக்கும் கொக்கும், மழை சாரலும், நாத்து நடும் பெண்மையும், இரு புறமும் வீடு இருக்க நடுவே நடமாட்டம் இல்லாது நீண்டு கிடக்கும் செம்மண் பாதையும் அர்த்தப்படுத்தி கொண்டே இருக்கிறது அழகான வாழ்வின் பக்கங்களை............