Monday, February 16, 2009

நிலா காலம் அது..........


காலம் நாம் வயதை கேட்கும் முன்
காதலை தேடினோம்
உனது அருகாமை இல் முட் செடிகளை கூட
முல்லை பூவாய் மணக்க செய்தது
கல்லூரி புத்தக அறைகளில்
காதல் காப்பியங்கள் மட்டும் படித்தோம்
அன்பு என்ற தலைப்பில் கட்டுரை எழுதி நீ கேட்க
உன் பெயர் மட்டும் எழுதி தந்தேன்
தூக்கத்திலும் நாம் நம்
வாழ்க்கை கனவுகள் மட்டும் சுமந்தோம்
பின் ஒரு வெயில் கொல்லும்
வெம்மை வேளை இல்
விதி வார்த்தைகளால் விளையாட
கூடல் ஆய் இருந்த நம் வாழ்வு
ஊடல் ஆய் உரு மாறியது
அதன் பின் காதலில்
ஊடல் ஓர் அங்கம் என்றேன்
நீயோ முடிவுரை என்றாய்
இடம் மாறிய இதயத்துக்கு " பதில் என்ன " என்றேன்
இதயம் ஒன்றும் இறைவன் இல்லை "பதில் சொல்ல" என்றாய்
ஒருவகை இல் வாழ்க்கை உம் வாணிபம் தான்
நான் என்னை இழந்து உன்னை பெற்றென்
நீயோ
நம் காதலே விலையாக கேட்டாய்
இப்போது நம்
கனவுகளுக்கு விடை எது கண்மணியே
பின் வருமொரு நாள் இல்
காயம் பட்ட கனவுகள் ஓடு
கல்லறை நோக்கி நான் பயண பட
ஊடல் உடைத்து வெளி வருவாய் நீ
அப்போது
உன் கண்ணீரின்
கனம் தாளாமல் கல்லாறைஇல்
ஒடிந்து விழும் ரோஜா முட்களோடு
நானும் ஊர் நாள்
உயிர்த்து எழுவேன் உனக்காய்
அதுவும்
ஓர் நிலா காலமாய் இருக்கும்.......