Tuesday, February 17, 2009

ஒரு ஆசிரியரின் பிரியா விடை

என் இளவேனில் கால செல்வங்களே...
நாளைய உலகின் நம்பிக்கைகளே...
இடம் மாறி பிறந்தோம் என்பதை விட
இடறல் வேறு யாதும் இல்லை இதயத்தில்!

மார்கழி யின் மென்பனி போலே என்
உயிர் ஊடுருவிய உள்ளங்களே.........

உம் வாழ்வு இன்றும் என்றும்
விருட்சமாய் வளர வாழ்த்துகள்!

எண்ணி வைத்த எண்ணாயிரம் கனவுகள்
உம் பின் நடை பயில வாழ்த்துகள்!

தந்தையும் தாயும் உம் புகழில்
பெரும் பெருமை கொள்ள வாழ்த்துகள்!

மாலை நேர விளையாட்டும்
மட்டில்லா கணிப்பொறி வகுப்பும்
நீண்ட நேர உரையடாலும்
எண்ணி சிரித்த நொடிப்பொழுதும்
நெஞ்சமெங்கும் நேசத்தோடு நிறைந்து இருக்க........

நீண்ட என் கனவுகள் துளைத்து எடுத்து
கடமைக்கு அசைத்து செல்ல
பொங்கி வரும் இந்நினைவுகளோடு
நாளை மீண்டும் சந்திப்போம் என
இமை நீர் அனைத்தும் தீர்ந்து போய்
இன்று பிரிக்கிறோம்
மனம் இசைக்கும் தீர சோக கானத்துடன்...........................

No comments:

Post a Comment